Saturday, February 15, 2014

களம்

நரேந்திர மோடி தன்னைப் பிரபலமாகிக் கொள்ளவும் தன்னுடைய குற்றங்களை மறைக்கவும் இணையதளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
குஜராத்தில் இருக்கும் நாடியாத் நகரத்தில் 6,200 இளைஞர்கள் மோடியால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி "இணையத்தில் மோடியைப் பற்றிய உண்மைகளை மறைத்து,அவரைப் புகழ்ந்து பொய்களைப் பரப்புவது" தான்.மோடியைப் புகழ்ந்து பொய்களைப் பரப்புவது,அதை எதிர்ப்பவர்களை அவதூறு செய்வது ஆகியவைதான் இவர்களின் பணி.

மோடியை டுவிட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.இதை வைத்து "இளையதலைமுறையினர் மோடி பக்கம்தான்" என்கின்றனர்.
பிரிட்டன் நிறுவனம் ஒரு மென்பொருளை உருவாக்கியிருந்தது அதன் பெயர் பேக்கர் ஆப்.இணையத்தில் போலியான நபர்களைக் கண்டுபிடிக்கும் மென்பொருள்.இதைப் பயன்படுத்தி மோடியின் அக்கவுன்ட்டை ஆராயும் பொது அந்த பத்து லட்சம் பேரில் 51% பேர் பேக்(போலி) மேலும் 36% பேரின் அக்கவுண்ட் இயங்கவேயில்லை என்பதும் தெரியவந்தது.ஆக பின்தொடரும் 10லட்சம் பேரில் 87% போலியான அக்கவுன்ட்கள்.
மோடியைப் பிரபலப்படுத்தும் பொறுப்பு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன் பெயர் ஆப்கோ.இது ஒரு அமெரிக்க நிறுவனம்.ஜார்ஜ் புஷ் இதே போல் தன்னைப் பிரபலமாக்க,விளம்பரப்படுத்த அவருக்கு இந்நிறுவனம்தான் உதவியது.
மாதம் 25,0000 டாலர் அந்த நிறுவனத்துக்குக் கட்டணம்.மோடி என்ன டிரஸ் செய்ய வேண்டும்,எப்படி பேச வேண்டும் என்பதில் தொடங்கி,பொய் பிரச்சாரத்திற்கு டிசைன் செய்து கொடுப்பதுவரை அந்நிறுவனத்தின் பொறுப்பு.

மோடியை ஆதரிக்கும்,குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என நிரூபிக்கும் இணைய தளங்கள்,அனைத்தும் ஒரே ஐ.பி அட்ரஸில் இருந்துதான் இயங்குகிறது.அனைத்தும் மோடிக்கு ஆதரவான கருத்துகளை பரப்ப உருவாக்கப்பட்டவை 

மேலும் சென்ற வாரம் மோடிக்கு விசா வழங்குவது குறித்து அமெரிக்க யோசிக்கிறது என்ற செய்திக்கு மோடி ஆதரவு இணையதளங்களில் ஒபாமா மோடியின்  உரையை டி.வியில் பார்ப்பதுபோல் ஒரு படத்தை வெளியிட்டார்கள்.சில தினகளுக்கு முன் பி.பி.சி அந்தப் படம் போலியானது என நிரூபித்தது.ஒபாமா "சி.சி.டி.வி"யைப் பார்ப்பது போன்ற புகைப்படத்தை அவ்வாறு எடிட் செய்துள்ளனர்.
இப்படி இணையத்தில் பல "தில்லு முல்லு" வேலைகள் செய்து தான் மோடி பிரபலமடைந்தார்.இதைவிட அதிர்ச்சியான ஒரு சம்பவம் உள்ளது...மோடி குஜராத்தின் உயரதிகாரிகளின்  மூலம் ஒரு பெண்ணை பின்தொடர்ந்தது கண்காணித்தது ...அடுத்த வாரம்..


-  வேனிற்கோ

No comments :

Post a Comment